×

குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

பெரம்பலூர், நவ.21:பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(35). இவரது மனைவி முருகம்பாள் (27). கடந்த 12 ஆண் டுகளுக்கு முன்பு, இவர்கள் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட னர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலையில் கண்ணன், முருகம்பாள் ஆகிய இருவருக்கு மிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கண்ணன் தன து மனைவி முருகம்பாளை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி யுள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த முருகம்பாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு பெரம் பலூர் மாவட்ட அரசுத்தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக முருகம்பாள் கொடுத்தப் புகாரின் பேரில், வி.களத்தூர் போலீ சார் வழக்குப்பதிவுசெய்து, தலை மறைவாக இருந்த கண்ணனை நேற்று கைது செய்தனர்.

Tags :
× RELATED நாட்டார்மங்கலத்தில் மாரியம்மன் வீதி உலா