×

மழை காலம் தொடங்கியுள்ளதால் அரசு பழைய கட்டிடங்களை ஆய்வு செய்ய வேண்டும்

நாகை,நவ.21: மழை காலம் தொடங்கியுள்ளதால் நாகையில் உள்ள அரசு பழைய கட்டிடங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்று நாகை எம்எல்ஏ தமிமுன்அன்சாரி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் நாகை நகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: தற்போது மழை காலம் தொடங்கியுள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழைய அரசு கட்டிடங்களை பரிசோதனை செய்து அவற்றில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும். அதை போல் தனியார் கட்டிடங்களையும் ஆய்வு செய்து அத்தகைய நிலையில் இருந்தால் உரிமையாளர்களிடம் எச்சரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags : government ,buildings ,season ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு