திசையன்விளை, நவ. 21: திசையன்விளை பேரூராட்சிக்கு உட்பட்ட முருகேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன்(46). இவர் அங்குள்ள சுடலைகோயில் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 19ம் தேதி வழக்கம்போல் வியாபாரம் முடிந்து கடையை பூட்டிச்சென்றார். நேற்று காலை கடையை திறக்க சென்றபோது கடை பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் 40 சிகரெட் பாக்கெட் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 ஆயிரம். இது குறித்த புகாரின்பேரில் திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். போலீசார் வழக்கு பதிந்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.