×

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் பலி

தூத்துக்குடி, நவ. 21: தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்தவர் ஜெகவீரபாண்டியன். தனியார் நிறுவன டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷா (33).இவர் வீட்டில் தண்ணீர் பிடிக்க மின்சார மோட்டரை இயக்கியுள்ளார். டேங்க் நிறைந்த நிலையில் மின் மோட்டார் சுவிட்சை ஆப் செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த தென்பாகம் போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி...