×

வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு அதிமுகவினர் உதவ வேண்டும் சண்முகநாதன் எம்.எல்.ஏ அறிக்கை

தூத்துக்குடி, நவ.21:தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள இன்றும் நாளையும் (21, 22ம்தேதி) புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்குதல் போன்ற பணிகளுக்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது.தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கு அதிமுக பூத் ஏஜென்ட் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அந்தந்த பகுதிகளிலுள்ள வாக்குச்சாவடிகளில் பொது மக்களுக்கு உரிய படிவங்களை பெற்று தந்தும், பூர்த்தி செய்து கொடுத்தும் உதவவேண்டும்.மேலும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி பகுதி நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு அமைப்பு பிரதிநிதிகள் முகாம் தொடர்பாக பொதுமக்களிடம் எடுத்துச்சொல்லி, புதிதாக  வாக்காளர்களை அதிகளவில் சேர்க்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபடவேண்டும்.பொதுமக்கள் இதனை பயன்படுத்தி வாக்குச்சாவடிகளில் புதிய வாக்காளர் சேர்த்தல், பெயர், முகவரி உள்ளிட்ட திருத்தப்பணிகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Tags : AIADMK ,public ,voter registration camps ,Shanmuganathan MLA ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...