×

அருப்புக்கோட்டையில் குறை தீர்க்கும் முகாம்

அருப்புக்கோட்டை, நவ.  20:  அருப்புக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட அருப்புக்கோட்டை டவுன், தாலுகா, மகளிர் காவல்நிலையங்கள், காரியாபட்டி, மல்லாங்கிணறு, ஆவியூர், பந்தல்குடி காவல்நிலையங்களில் பொதுமக்கள் பல பிரச்னைகள் சம்பந்தமாக குறித்து புகார் அளித்துள்ளனர். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட எஸ்.பி, டிஎஸ்பிக்கு புகார் மனுக்கள் அனுப்பியுள்ளனர். இவற்றில் பல வழக்குகள் மாதக்கணக்கில் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
 இந்த மனுக்களை உடனடியாக விசாரித்து தீர்க்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி மாவட்ட எஸ்பி உத்தரவுப்படி அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் டிஎஸ்பி சகாயஜோஸ் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தாலுகா இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் கோட்டத்திற்குட்பட்ட எஸ்ஐக்கள் ஆகியோர் புகார்தாரர், எதிர்மனுதாரர்களை வரவழைத்து விசாரணை செய்து நிலுவையில் உள்ள மனுக்களுக்கு தீர்வு கண்டனர். இந்த குறை தீர்க்கும் முகாம் வாரந்தோறும் கோட்டத்திற்குட்பட்ட காவல்நிலையங்களில் நடைபெறும் என்றும் புகார் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி தெரிவித்தார்.

Tags : Debugging camp ,Aruppukottai ,
× RELATED மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா அருப்புக்கோட்டையில் இன்று அன்னதானம்