×

கபடியில் முன்விரோதம் வாலிபர் மீது தாக்குதல்

போடி, நவ.20: போடி அருகே கபடி விளையாட்டில் முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முனீஸ்குமார்(22). இதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் மகன் வெற்றி(22). இருவருக்கும் கபடி விளையாட்டில் முன்விரோதம் இருந்தது. இந்த முன்விரோதத்தில் வெற்றி, இவரது சகோதரர் தினேஷ்(18), முருகன் மகன் லிங்கேஷ்(20), மது மகன் தனுஷ் மற்றும் ஆதித்யா ஆகியோர் சேர்ந்து முனீஸ்குமார் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது பெற்றோரையும் கம்பு, கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.இதில் முனீஸ்குமாருக்கும் அவரது தாயாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.இதுகுறித்து முனீஸ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வெற்றி, தினேஷ், லிங்கேஷ் ஆகியோரை கைது செய்தனர்.இதேபோல் லிங்கேஷ் கொடுத்த புகாரின்பேரில் போடி தாலுகா போலீசார் முனீஸ்குமார் மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...