×

1 கிலோ கஞ்சாவுடன் 2 பெண்கள் கைது

கம்பம், நவ.20: கம்பத்தில் பெண் கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். கம்பம் உலகத்தேவர் தெரு பத்திரகாளியம்மன் கோயில் அருகே வசித்து வருபவர் செல்லக்காளி(60). இவரது வீட்டிலிருந்து கடந்த மே 21ம் தேதி 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் தலைமறைவாக இருந்து வந்த ஜெயக்குமார்(28), வண்ணகிளி(48) ஆகியோரை தேடி வந்தனர். நேற்று கம்பம் உலகத்தேவர் தெருவில் இன்ஸ்பெக்டர் சிலைமணி ,சப்.இன்ஸ்பெக்டர் திவான்மைதீன் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொண்டிருந்தனர். அப்போது தலைமறைவாக இருந்த வண்ணகிளி என்பவர் குருங்குமாயன் தெருவைச் சேர்ந்த ராஜாத்தி(44) உடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வண்ணக்கிளி மற்றும் ராசாத்தியை சிறையில் அடைத்தனர்.

Tags : women ,
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது