×

பண்ணைக்குட்டையில் மீன் வளர்த்து விவசாயிகள் நல்ல லாபம் பெற வாய்ப்பு

சிவகங்கை, நவ.20: மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது, ‘கிராம விவசாயிகளின் பட்டா நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்துத்தரப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளின் பட்டா நிலங்களில் மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைத்துக் கொடுத்து, அவர்களுக்கு மானியத்தில் மீன் குஞ்சுகள் வழங்கப்படுகிறது. பண்ணைக்குட்டை அமைப்பதற்கு 30 முதல் 40 சென்ட் நிலம் இருந்தால் போதுமானது.
இம்மாவட்டத்தில் விவசாயிகளின் பட்டா நிலங்களில் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது. பண்ணைக்குட்டைகளில் மழைநீரை சேகரித்து அதில் மீன் வளர்ப்பதன் மூலமாக அதிக லாபம் ஈட்ட முடியும். மீன் வளர்ப்பு மிகக்குறைந்த செலவில் அதிக வருமானம் தரக்கூடிய மிகச்சிறந்த சுயதொழிலாகும்.பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பில் முதல் மூன்று மாதங்களுக்கு மீன்கள் அதிக எடை வந்தால்தான் நல்ல லாபம் கிடைக்கும். அதனால், தினமும் சரியான அளவில் தீவனங்களை கொடுக்க வேண்டும்.

Tags : farm ,
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி