×

மேலும் 3 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்

மதுரை, நவ. 20:  மதுரை மாவட்டத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5  சதவிகித இடஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்கு நேற்று முன்தினம் நடந்த கலந்தாய்வில் 5 பேர் தேர்வாகினர். இந்நிலையில், தொடர்ந்து நேற்று நடந்த கலந்தாய்வில் மதுரை எழுமலை அரசு மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த கார்த்திக், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிக்கு தேர்வானார். செக்கானூரணி கள்ளர் பள்ளியைச் சேர்ந்த பிரதாப். திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரிக்கும், மதுரை மாநகராட்சி கஸ்தூரி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த காவியாவிற்கு, கன்னியாகுமரி மூகாம்பிகை மருத்துவக்கல்லூரிக்கும் தேர்வாகியுள்ளனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...