பழநி, நவ. 20: பழநி அருகே கீரனூரில் எஸ்டிபிஐ கட்சியின் அரசியல் பயிலரங்க நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் கைசர் தலைமை வகிக்க,. மேற்கு மாவட்ட பொது செயலாளர் முபாரக் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் தமீம் அன்சாரி, மாவட்ட செயலாளர் சதாம் உசேன், தொகுதித் தலைவர் அக்பர் அலி, கிழக்கு மாவட்டத் தலைவர் அப்துல் லத்தீப் கலந்து கொண்டனர். சமூக சேவை புரிந்த அறம் அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜே.பி.சரவணன், சித்த மருத்துவர் மகேந்திரனுக்கு விருதுகள் வழங்கப்ட்டன.