×

பெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

பெரும்புதூர்: பெரும்புதூர் தெற்கு ஒன்றிய திமுக  சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. காஞ்சி வடக்கு மாவட்டம், பெரும்புதூர் தெற்கு  ஒன்றியம் மற்றும் பேரூர்  திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள், துணை பொறுப்பாளர்கள், கிளை செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் பெரும்புதூரில் நேற்று நடந்தது. பெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால் தலைமை வகித்தார். இளைஞரணி அமைப்பாளர் குண்ணம் ராமமூர்த்தி வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் குண்ணம் முருகன், வளர்புரம் ஜார்ஜ், செந்தில் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ கலந்து கொண்டு, வாக்குச்சாவடி முகவர்கள், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது படிவங்களை சரி பார்ப்பது, வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், இறந்தவர்கள், வேறு ஊருக்கு மாறுதலாகி சென்றவர்கள், 18 வயது பூர்த்தியான அனைவரையும் கண்டுபிடித்து ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு  ஆலோசனைகளை வழங்கினார். மேலும் வாக்குச்சாவடி முகவர்களுக்கான படிவங்களை வழங்கினார். இதில் அவைத்தலைவர் மோகனன், ஒன்றிய அமைப்பாளர் மண்ணூர் சரவணன், வல்லக்கோட்டை முருகன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Polling Agents Consultative Meeting ,DMK ,Perumbudur South Union ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி