திருவேங்கடம், நவ. 20: திருவேங்கடம் மற்றும் சுற்று வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கலிங்கப்பட்டி பஞ்சாயத்து மேல மரத்தோணி கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் காளிராஜ்(40) என்பவருக்கு மண் சுவரினால் கட்டப்பட்ட ஓட்டு வீடு மழையால் சரிந்து விழுந்தது. ஊனமுற்ற காளிராஜ் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் வீட்டில் படுத்திருந்தார். நேற்று அவரது மனைவி, குழந்தைகள் வெளியே சென்றிருந்தனர். இந்நிலையில் திடீரென ஓட்டுக்கூரை திடீரென சரிந்து விழுந்தது. இதில் காளிராஜ் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். தகவலறிந்த அ.கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் கோமதி, கலிங்கப்பட்டி விஏஓ ராஜலட்சுமி, கிராம உதவியாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சேத மதிப்பினை ஆய்வு செய்தனர்.