×

புதுகை நகரில் 50 மிமீ மழை பதிவு

புதுக்கோட்டை, நவ.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக புதுகை நகரில் 50 மிமீ மழை பதிவாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி கடந்த 3 நாட்களாக தொடர் மழை பரவலாகப் பெய்தது. இதில் நேற்றுமுன்தினம் பகல், இரவு மற்றும் வியாழக்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப்பொழிவு விவரம் (மிமீட்டரில்):புதுக்கோட்டை நகரம் 50, பெருங்களூர் 18.20, ஆலங்குடி23.20, கந்தர்வகோட்டை 2, கறம்பக்குடி 16.40, மழையூர் 27.40, திருமயம் 13.40, அரிமளம் 5.20, மீமிசல்7.20, மணமேல்குடி 6, இலுப்பூர் 3, குடுமியான்மலை 14, அன்னவாசல் 5, விராலிமலை 3.50, கீரனூர் 21.40, பொன்னமராவதி 2.40, காரையூர் 2. மாவட்டத்தின் சராசரி மழை 9.18 மிமீட்டர் ஆகும். நேற்று (வியாழக்கிழமை) பகலில் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் மழையில்லை. நேற்று பகலில் நல்ல வெயில் அடித்தது.

Tags : rainfall ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில்...