×

ரோட்டில் நடந்து சென்ற பெண் ஜோதிடரிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு வலை

கரூர், நவ. 20: கரூர் அருகே நடந்து சென்ற ஜோதிடரிடம் செயினை பறித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் வையாபுரி நகர் 2வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் நவமணி(47). ஜோதிடர். இவர் நேற்று முன்தினம் கரூர் காந்திபுரம் வழியாக நடந்து சென்றார். அப்போது பைக்கில் பின்னால் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நவமணியின் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.இந்த சம்பவம் குறித்து நவமணி டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : astrologer ,road ,Assamese ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி