×

சின்னாண்டாங்கோவிலில் சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி

கரூர், நவ. 20: கரூர் திண்டுக்கல் சாலையில் இருந்து பெரியார் வளைவு பாதைக்கு செல்லும் பிரதான சாலை சின்னாண்டாங்கோயில் சாலை. வர்த்தக நிறுவனங்கள் அதிகளவு இந்த சாலையில் உள்ளன. கடந்த நான்கு நாட்களாக கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சின்னாண்டாங்கோயில் சாலையிலும் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு தண்ணீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : Motorists ,road ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...