கரூர், நவ. 20: கரூர் அண்ணா வளைவு அருகே உள்ள தெருவில் நேற்று அதிகாலை ஆலமரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் அண்ணா வளைவு அருகே ஆலமரத்தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமும் குடியிருப்புகளும் வர்த்தக நிறுவனங்களும் அதிகளவு உள்ளன.கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக இந்த தெருவில் இருந்த ஆலமரம் நேற்று அதிகாலை தெருவை மறைக்கும் வகையில் விழுந்தது. இதில் அருகில் இருந்த டெலிபோன் கம்பமும் பாதிக்கப்பட்டது.இதனையடுத்து, இந்த தெருவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அதிகாரிகள், பணியாளர்கள் மூலம் மரத்தை அகற்றினர். அதற்கு பிறகு தான் போக்குவரத்து சரியானது.