×

திண்டிவனம் கிளை சிறையில் பரபரப்பு ஜெயில் வார்டன் பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி

திண்டிவனம், நவ. 13: திண்டிவனம் கிளை சிறையில் ஜெயில் வார்டன் பணி சுமை காரணமாக கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நல்லியக்கோடன் நகர் உமாபதி தெருவை சேர்ந்த ராமு என்பவர் மகன் பாரதி மணிகண்டன் (26). இவர் திண்டிவனம் கிளை சிறையில் இரண்டு ஆண்டுகளாக வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இதில் காவலர்கள் சுழற்சி முறையில் சென்ட்ரி பார்க்கும்போது மற்ற காவலர்கள் அனைவரும் ஸ்டூலில் அமர்ந்து சென்ட்ரி பார்த்து வருவதாகவும், பாரதி மணிகண்டன் சென்ட்ரி பார்க்கும்போது ஸ்டூலில் அமரக்கூடாது நின்று கொண்டே இருக்க வேண்டும்.

என்று ஓய்வு தராமல் சூப்பிரண்ட் வேலை வாங்குவதாக கூறி பாரதி மணிகண்டன் மனஉளைச்சலில் இருந்து வந்தாராம். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவில் பிளேடால் தன் இடதுகையில் கிழித்துக்கொண்டார். சக காவலர்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் பணிக்கு திரும்பினார். இரவு நேரத்தில் திண்டிவனம் கிளை சிறையில் காவலர் கையை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை