ஏரல், நவ. 13: சாயர்புரம் அருகே கொத்தலரிவிளை, சண்முகபுரம், சக்கம்மாள்புரம் பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 25 பேர், பண்டாரவிளையில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சாயர்புரம் அருகேயுள்ள கொத்தலரிவிளை சித்திரைவேல், மகாராஜன், கதிரவன், ராமர், காசி, சக்கம்மாள்புரம் திருமணி வாசகம், சண்முகபுரம் வேல்துரை, சந்னராஜ், தங்கராஜ், விக்னேஷ், சித்திரைபாண்டி, தினேஷ், பிரவீன்குமார், பார்த்திபன், வனதுரை, முத்துக்குமார், பாலசுப்பிரமணியன், ராமையா உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 25 பேர், பண்டாரவிளையில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் வைகுண்டம் கிழக்கு அழகேசன், மேற்கு காசிராஜன், வை. யூனியன் துணை சேர்மன் விஜயன், பெருங்குளம் நகரச் செயலாளர் வேதமாணிக்கம், சக்கம்மாள்புரம் கிளைச் செயலாளர் கில்பர்ட், பண்டாரவிளை பாஸ்கர், ஜெ. பேரவை மாவட்ட துணைத்தலைவர் ரத்தினசபாபதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.