புதுக்கோட்டை, நவ.13: புதுகை நகராட்சி பகுதியில் 2ம் கட்டமாக கொரோனா நிவாரண சமையல் பொருட்களை ஸ்கூட்டரில் சென்று அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் அமைச்சர விஜயபாஸ்கரின் சொந்த நிதியிலிருந்து இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண சமையல் பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கும் இருசக்கர வாகனத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார். அப்போது அவர், நிவாரண பொருட்கள் கட்சி பாகுபாடின்றி அனைத்து ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. கொரோனா காலமாக இருந்தாலும் சரி கஜா புயல் அடித்த போதும் சரி அதிமுக அரசுதான் மக்களோடு மக்களாக நின்று அவர்களுக்கு வேண்டிய தேவைகளையும், உதவிகளையும் செய்து வருகிறது என்றார்.