×

வச்சக்காரப்பட்டி எஸ்ஐ உட்பட 3 பேர் இடமாற்றம்

விருதுநகர்,நவ. 13: விருதுநகர் வச்சக்காரப்பட்டி போலீஸ் சரகத்தில் மணல் திருட்டு, பட்டாசு திரி தயாரிப்பு தொழில்கள் முறையற்ற வகையில் நடந்து வருகிறது. இந்நிலையில் வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலைய போலீசார் சிலர் தன்னிச்சையாக செயல்படுவதாக டிஐஜி ராஜேந்திரனுக்கு புகார் சென்றது. இது தொடர்பான விசாரணையை தொடர்ந்து நிர்வாக காரணங்களுக்காக வச்சக்காரப்பட்டி போலீஸ் எஸ்ஐ வீராசாமி, ஏட்டு குமார் இருவரையும் திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கும், ஏட்டு மாரீஸ்வரன் நரிக்குடி போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து எஸ்பி பெருமாள் உத்தரவிட்டுள்ளார்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...