×

போதிய விலையில்லாததால் செடியிலேயே அழுகும் தக்காளி

பெரியகுளம், நவ. 13: பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து வகையான காய்கறிகளை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலம், சில்வார்பட்டி, குள்ளப்புரம், தேவதானபட்டி, சக்கரைபட்டி உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் தக்காளி விவசாயத்தினை மேற்கொண்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் விவசாய விளைபொருட்கள் பெரியகுளம், ஆண்டிபட்டி, வத்தலக்குண்டு ஆகிய பகுதிகளில் உள்ள கமிஷன் மண்டிகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்று வந்தனர். இந்நிலையில் தற்பொழுது தக்காளியின் வரத்து அதிகரித்து விலை கிலோ ஒன்று 5 ரூபாய்க்கும் கீழ் சென்றதால் பறிக்கும் கூலிக்கு கூட வராத நிலையில் பழுத்த தக்காளி பழங்கள் அனைத்தும் விளை நிலைத்திலே விவசாயிகள் பறிக்கப்படாமல் விடப்பட்டு அழுகி வருகின்றது. மேலும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக இருக்கும் தக்காளி செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதையும் விவசாயிகள் நிறுத்தி உள்ளனர்.

Tags : plant ,
× RELATED கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்