தொண்டி, நவ.13: தொண்டி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நேற்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்ற இருவரை விசாரித்ததில், சென்னை தண்டையார் பேட்டை பட்டேல் நகரை சேர்ந்த பியான் முஷ்ரம் (24), ராயப்பேட்டையை சோந்த பரீன் ஷகாரா(20) என்பதும், இருவரும் காதலர்கள் என்பதும் தெரியவந்தது. மேல் விசாரணையில் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். போலீசாரின் தீவிர விசாரணையில் இருவரும் கஞ்சா வியாபாரி என தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்த தொண்டி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.