×

டூவீலரில் சென்ற வாலிபர் கண்டெய்னர் மோதி பலி

மதுரை, நவ.13: மதுரை ரிங்ரோடு சந்திப்பில் கண்டெய்னர் லாரி மோதியதில் டூவீலரில் சென்ற வாலிபர் உடல் இரண்டு துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் இருந்து நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் உள்ள ஒரு தனியார் குளிர்பான நிறுவனத்திற்கு சரக்கு ஏற்றிக்கொண்டு கண்ெடய்னர் லாரி நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி நேற்றிரவு மதுரை பாண்டி கோயில் ரிங்ரோடு சந்திப்பில் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒத்தக்கடையில் இருந்து மதுரை நோக்கி டூவீலரில் வந்த 28 வயது வாலிபர், லாரியை வலதுபுறமாக முந்திச்செல்ல முயன்றார்.

நிலை தடுமாறிய வாலிபர் லாரியின் சக்கரங்களில் சிக்கினார். இதில் வாலிபர் உடல் 2 துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தல்லாகுளம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் நெல்லையை சேர்ந்த பவுன்ராஜிடம் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் போக்குவரத்து புலானய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, இறந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என விசாரித்து வருகின்றனர். இவ்விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...