×

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு : பா.ஜவினர் கலெக்டரிடம் மனு

திருப்பூர், நவ.13:  டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நேற்று திருப்பூர்  கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து திருப்பூர், பா.ஜ மாவட்ட மகளிர் அணி தலைவி சுதாமணி சதாசிவம் தலைமையில் கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர், மாநகராட்சிக்குட்பட்ட 10வது வார்டு பகுதியான அவினாசி ரோட்டில் எஸ்.ஏ.பி தியேட்டர் எதிரில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடை மிகவும் பிரதான ரோட்டில் அமைந்துள்ளதால் போக்குவரத்திற்கு பெரும் இடையூராக உள்ளது. இப்பகுதியின் மிக அருகில் பஸ் நிறுத்தம் இருக்கக்கூடிய சூழ்நிலையில் இத்தகைய டாஸ்மாக் கடையினால் பஸ் நிறுத்தத்திற்கு வரக்கூடிய பெண்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ள டாஸ்மாக் கடையை மக்களுக்கு தொந்தரவு இல்லாத வேறு இடம் மாற்ற வேண்டும். மேலும், தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ள நிலையில், குடியிருப்புகள் நிறைந்த ஆசர்நகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடையை திறந்தால் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு இடையூறு ஏற்படும். எனவே, புதிய டாஸ்மாக் கடைக்கு அனுமதியளிக்க கூடாது என கேட்டுக்கொண்டனர்.

Tags : store ,Tasmac ,Collector ,BJP ,
× RELATED மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில்...