×

வாக்கிங் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்தவருக்கு தர்ம அடி

திருப்பூர்,நவ.13: திருப்பூர் காங்கேயம் ரோடு வி.ஜி.வி.கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன்(48). பனியன் நிறுவன மேலாளர். இவரது மனைவி பூமயில் (43). முன்தினம் காலை 6.30 மணியளவில் பக்கத்து வீட்டு பெண்ணுடன் வி.ஜி.வி.கார்டன் மெயின் வீதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த நபர் பூமயில் அணிந்திருந்த ஒரு பவுன்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். பூமயில் சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் அந்த மர்ம நபரை வாகனத்தில் துரத்தினர். அப்போது வி.ஜி.வி.கார்டனில் இருந்து மணியகாரன்பாளையம் செல்லும் வழியில் உள்ள காட்டு பகுதியில் அவர் மறைந்து இருந்தார். அவரை பொதுமக்கள் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் ரூரல் போலீசாருக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் காங்கேயம் ரோடு, கதிர்நகர் பின்புறம் உள்ள செம்மேடு பகுதியை சேர்ந்த கணேசன் (40) என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...