×

கருமத்தம்பட்டியில் காங்கிரஸ் மாநாட்டையொட்டி கால்கோள் நடவு விழா

சோமனூர், நவ.13:  கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு வருகிற 22ம் தேதி கருமத்தம்பட்டியில் நடைபெறுகிறது. அதற்கான கால்கோள் நடவ விழா நேற்று கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் கால்கோள் நட்டு மாநாட்டு பணிகளை துவக்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் எம்.என். கந்தசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சரவணகுமார், ஐ.என்.டி.யூ.சி. தொழில் சங்க தலைவர் கோவை செல்வம், சர்க்கிள் தலைவர் அசோக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழையூர் செல்வராஜ், மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அன்னூர் சௌந்தர்ராஜன், பேரூர் திருமூர்த்தி, கட்சியின் நிர்வாகிகள் ஜீவி, நவீன்குமார், ரங்கசாமி, துரைமணி, சௌந்தர்ராஜன், ராமசாமி, ராயல்மணி, பாலசுப்ரமணியம், பாலு, பாலச்சந்தர், சகாயராஜ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Foot Planting Ceremony ,Congress Conference ,Karumathampatti ,
× RELATED மோடியின் கட்டுப்பாட்டில் ஜெகன்மோகன்,...