×

‘கற்போம் எழுதுவோம்’ இயக்கத்தில் வில்லுப்பாட்டு மூலம் பயிற்சி

நாகர்கோவில், நவ.12: புதிய வயதுவந்தோர் கல்வி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட இருக்கும் ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கத்தில் வில்லுப்பாட்டு மூலம் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு ‘கற்போம் எழுதுவோம்’ இயக்கத்தின் சார்பில் வரும் 23ம் தேதி முதல் கற்பிக்கும் பணி தொடங்க இருக்கிறது. இதன் முதல் கட்டமாக நவம்பர் 6, 7ம் தேதிகளில் திருச்சியில் மாநில அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாவட்ட கருத்தாளர்கள், வட்டாரத்திற்கு இரண்டு ஆசிரியர் பயிற்றுநர்கள் வீதமும், ஒரு தொடக்க கல்வி ஆசிரியர் என மூன்று பேர் வீதம் மொத்தம் 27 பேருக்கு மாநில கருத்தாளர்களால் வில்லுப்பாட்டு மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் பாக்கியசீலன், மாநில கருத்தாளர்கள் ஜோஸ், லாரன்ஸ், நாகராஜன், பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுகிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...