×

கடலூர் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா

கடலூர், நவ.  12: கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. நேற்று 51 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,664  ஆனது. நேற்று 44 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரையில் 23ஆயிரத்து 144 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.மாவட்டத்தில் நோய்த் தொற்று காரணமாக 200 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 46 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 48 ஆயிரத்து 794 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிப்பு காரணமாக மாவட்டத்தில் 15 இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் ஒரு டாக்டர் மற்றும்  ஏற்கனவே நோய்த்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 37 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.  411 பேர் பரிசோதனை காத்திருப்பில் உள்ளது.   கடலூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று காரணமாக நெய்வேலியை சேர்ந்த 82 வயது உடைய ஆண் இறந்த நிலையில் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 274 ஆனது.

Tags : Corona ,Cuddalore district ,
× RELATED கடலூர் மாவட்டம் ராமாபுரம் ஊராட்சியில் பெண் அடித்துக் கொலை!!