×

வி.கே.புரத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வி.கே.புரம்,நவ.12:  கலெக்டர் அறிவித்த ஊதியத்தை வழங்ககோரி வி.கே.புரத்தில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   
 வி.கே.புரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கலெக்டர் அறிவித்த ஊதியத்தை விட குறைந்த ஊதியம்      வழங்கப்படுவதாக கூறி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று மாலை நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சுடலையாண்டி, இசக்கிராஜன், ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே கடந்த மாதம் 6ம் தேதி நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கோரிக்கை நிறைவேற்றப் படவில்லையெனில் வரும் 17ம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்தனர்.

Tags : Contract cleaning workers ,
× RELATED அருவங்காடு வெடி மருந்து ஒப்பந்த...