×

வாலிபரை கத்தியால் குத்தி செல்ேபான் பறிப்பு 2 பேர் கைது செய்யாறு அருகே துணிகரம்

செய்யாறு, நவ.12: செய்யாறு அருகே வாலிபரை கத்தியால் குத்தி செல்போன் பறித்த சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மற்ெறாருவரை தேடிவருகின்றனர். செய்யாறு அடுத்த வெங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(26). இவர் தனது நண்பர்கள் சதீஷ், கார்த்தி ஆகியோருடன், கடந்த 8ம் தேதி இரவு வீட்டின் அருகே பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 3 வாலிபர்களில் ஒருவன் பெருமாள் வைத்திருந்த செல்போனை பறித்தான்.‘ இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெருமாளின் நண்பர்கள் அவர்களை தடுத்தனர். ஆனால், பைக் ஆசாமிகளில் ஒருவன் பெருமாளின் கண்ணத்தில் கத்தியால் குத்தினான். பின்னர், அவர்களை மடக்கி பிடிக்க முயன்றபோது பைக்கை அங்கேயே விட்டுவிட்டு 3 பேரும் தப்பியோடிவிட்டனர்.

தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பைக்கில் வந்தவர்கள் வெம்பாக்கம் தாலுகா ஹரிஹரபாக்கம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(21), மாதவன்(19), திருவடிராயபுரம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மாதவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரையும் பிரம்மதேசம் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரஞ்சித்தை தேடிவருகின்றனர்.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...