×

காரியாபட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

காரியாபட்டி, நவ. 12: காரியாபட்டி பேரூராட்சிக்குட்பட்ட டி.பி ரோடு  நடைபாதை வியாபாரிகள் மற்றும் டூவீலர்கள் ரோட்டை மறித்து நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் அலுவலகங்களுக்கு செல்லும் அரசு வாகனங்களுக்கு போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. காரியாபட்டி பஸ்நிலையம் மற்றும் பயணியர் விடுதி செல்லும் வழியில் இருபுறமும் வாகனங்களை நிறுத்தியும், நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பின் ஈடுபட்டுள்ளனர். பயணியர் விடுதி செல்லும் பாதையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், ஊராட்சிய ஒன்றிய அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், தோட்டக்கலை துறை அலுவலகம், மார்க்கெட் தெரு ஆகியவை உள்ளன. இப்பகுதியில் அரசு வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இனைந்து ஆக்கிரமிப்புகளையும், ரோட்டை மறித்து நிறுத்தும் டூவீலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : removal ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...