விருதுநகர், நவ. 12: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின் பேரில் கோகுலம் குழுமத்தலைவர் கோகுலம் எம். தங்கராஜ் தலைமையில் கேரள பாரம்பரிய செண்டை மேளம் முழங்க 1,000 பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் மலர்தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.