திருமங்கலம், நவ.12: மதுரை தெற்கு மாவட்டத்தில் ஆன்லைன் மூலமான திமுக உறுப்பினர் சேர்க்கையில் இதுவரையில் 30 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர் என மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார். திருமங்கலத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று ஆன்லைன் மூலமான புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதனை துவக்கி வைத்த தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசுகையில், ‘‘தமிழகம் முழுவதும் ஏராளமானோர் ஆன்லைன் மூலமாக கட்சியில் இணைந்து வருகின்றனர். இதுவரையில் 20 லட்சம் பேர் கட்சியில் இணைந்துள்ளனர். மதுரை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை முகாமில் இதுவரை 30 ஆயிரம் பேர் திமுகவில் புதிய உறுப்பினராக இணைந்துள்ளனர்’’ என்றார். நிகழ்ச்சியில் திருமங்கலம் நகர பொறுப்பாளர் முருகன், இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாசபிரபு, நகர நிர்வாகிகள் செல்வம், பாலகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.