×

வேடசந்தூர் ஸ்டேஷன் முன்பு தர்ணா

வேடசந்தூர், நவ. 12: வேடசந்தூரில் டூவீலரில் மோதியதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் காயமடைந்த 5 பேர் சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி ஒரு தரப்பினருக்கு ஆதரவாக நேற்று இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வேடசந்தூர் காவல்நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி அசோகன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இந்த மோதல் தொடர்பாக போலீசார் 9 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

Tags : Dharna ,station ,Vedasandur ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...