×

வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், நவ. 12: திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய மாவட்ட தலைவர் அந்தோணி தலைமை வகிக்க, மாநில நிலை செயலாளர் கண்ணன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் சுடலை சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வேண்டும், நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மத்திய மாவட்ட செயலாளர் பெரியசாமி, பொருளாளர் அலெக்ஸ், கிழக்கு மாவட்ட செயலாளர் ரூபன் சுந்தர், துணை செயலாளர் கணேசன்,  
ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் தண்டபாணி,  ஒன்றிய செயலாளர் குழந்தை உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,withdrawal ,Dindigul ,
× RELATED திண்டுக்கல் கூட்டத்தில் எஸ்டிபிஐ...