×

கட்டிமேடு ஊராட்சியில் தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாட உறுதிமொழி ஏற்பு

திருத்துறைப்பூண்டி, நவ.12: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூணடி அருகே உள்ள கட்டிமேடு ஊராட்சியில் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக எப்படி கொண்டாடுவது என்பது குறித்து ஊராட்சி மன்றம் சார்பில் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காமல் பெற்றோர்கள் முன்னிலையில் வெடி வெடிக்கவும், இரவு 10 மணிக்கு மேல் வெடிக்காமல் இருக்கவும், வீட்டு வாசலில் வாளியில் தண்ணீர் மற்றும் சாக்குகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். சாலை ஓரங்கள் மற்றும் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அருகில் வெடிக்காமல் இருக்கவும். எதுவும் விபத்து என்றால் உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்யவும். எப்படி பாதுகாப்பாகவும் இருப்பது போன்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் மாலினி ரவிச்சந்திரன், ஊராட்சி செயலர் புவனேஸ்வரன், துணைத் தலைவர் பாக்கியராஜ் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags : Deepavali ,Kattimedu ,
× RELATED கட்டிமேடு ஆதிரெங்கம் புதிய ஜமாத் மன்ற நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு