×

சம்பளம், போனஸ் வழங்க கோரி புதுகை நகராட்சி அலுவலகம் முன் துப்புரவு பணியாளர்கள் தர்ணா

புதுக்கோட்டை, நவ.12: புதுக்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் சம்பளம், போனஸ் வழங்ககோரி நேற்று நகராட்சி அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளது. நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக 100க்கு மேற்பட்டோர் தூய்மை பணி செய்து வருகின்றனர். 42 வார்டுகளிலும் தூய்மைப்பணியில் ஈடுபட்டு வரும் துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. எனவே சம்பளம், போனஸ் உடனடியாக வழங்க கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலையின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் விடுதலைக்குமரன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தின் முன்வாசல் கதவைப் பூட்டி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு டவுன் போலீஸார் வந்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செய்தனர்.

Tags : Tarna ,office ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...