க.பரமத்தி, நவ.12: நிலக்கடலை ஒரு கிலோவிற்கு ரூ.2 உயர்ந்து 56க்கு ஏலம் போனது. கரூர் மாவட்டத்தில் கரூர், க.பரமத்தி ஆகிய இரு வெவ்வேறு ஒன்றிய கிராம புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடந்த ஏலத்தில் 160மூட்டைகளில் 5,568எடைக்காக நடந்த ஏலத்தில் நிலக்கடலை கிலோவிற்கு அதிக பட்சமாக ரூ.56க்கும், குறைந்த பட்சமாக ரூ.52க்கும், ஏலம் போனது. கடந்த வாரத்தை விட நிலக்கடலை ஒரு கிலோவிற்கு ரூ.2க்கு உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.