×

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்

ஊட்டி, நவ. 12: நீலகிரி மாவட்ட  கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான அனைத்து கட்சியினருடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நிலையில், வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டம் தோறும் தயாரிக்கப்பட்டு வருகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மற்றும் வெளியிடுவது தொடர்பான் ஆலோசனை கூட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலக கூட்டரங்களில் நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Tags : party meeting ,release ,
× RELATED சித்திரை திருவிழாவிற்காக மருதாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு