×

கங்கைகொண்டானில் பேரிகார்டுகள் மீது கார் மோதல்

நெல்ைல, நவ. 11: கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே தடுப்பிற்கு வைக்கப்பட்ட பேரிகார்டுகள் மீது கார் மோதிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் ஆக்னல் (24). இவர் கோவில்பட்டியில் இருந்து நெல்லைக்கு காரில் வந்துள்ளார். அப்ேபாது கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சோதனை
சாவடி அருகேயுள்ள பேரிகார்டுகள் மீது மோதி நின்றது. இதில் தடுப்புகள் சேதமடைந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக ஆக்னல் காயமின்றி தப்பினார்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Car collision ,
× RELATED மின் கம்பத்தில் கார் மோதல் 2 பேர் கருகி பலி