×

தீயணைப்பு துறையினர் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட வாகனம் மூலம் விழிப்புணர்வு

ேவலூர், நவ. 11: வடமேற்கு மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சத்யநாராயணன் உத்தரவின் பேரில், வேலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் அறிவுறுத்தின் பேரில், நிலைய அலுவலர்கள் மோகன்ராஜ், வெங்கடேசன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை வேலூர் கோட்டை பூங்கா அருகே தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிப்பது, குழந்தைகள் பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்கக்கூடாது.

எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அணைப்பது, தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது போன்ற செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்ட முழுவதும் 2 வாகனங்கள் மூலம் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Diwali ,fire department ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு