×

குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம்

நெய்வேலி, நவ. 11: குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு தூய்மை பணியில் 60க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கர் விழப்பள்ளம் மாரியம்மன் கோயில் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது விசிக நகர செயலாளர் பாலமுருகன்  துப்புரவு பணியாளர் சங்கரிடம் தங்கள் பகுதியில்  தேங்கியுள்ள கழிவு நீர் கால்வாய் பகுதியை  சுத்தம் செய்ய கூறியுள்ளார். அப்போது  சங்கருக்கும் பாலமுருகனுக்கும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் தூய்மை பணியாளர் சங்கர் மீது குறிஞ்சிப்பாடி காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்தும்,  வழக்கை வாபஸ் பெறக்கோரியும் பணியில் உள்ள ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதனால் குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கிக் கிடந்தது. தூய்மை பணியாளர் உண்ணாவிரதம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : cleaning staff ,
× RELATED சுதந்திர தினவிழாவில் தூய்மை...