×

திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ பங்கேற்பு

புவனகிரி, நவ. 11:  விவசாயிகள், ஏழை எளிய மக்கள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் குரல் வளையை நெரிக்கும் எடப்பாடி அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுகவின் மாநில பொறியாளர் அணி செயலாளர் துரை.கி. சரவணன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் விசிக அறவாழி, மார்க்சிஸ்ட் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் துரை, மதிமுக குணசேகரன், திராவிடர் கழகம் யாழ்திலீபன், தவாக சேரலாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று பேசியதாவது:

ஊரக வளர்ச்சித் துறையில் சில அதிகாரிகள் புரோக்கர்களாக செயல்படுகின்றனர். 15வது நிதிக்குழு திட்டத்திற்கு 3 சதவீத கமிஷனை அதிகாரிகளே வசூல் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள். அதிகாரிகள் புரோக்கர்களாக மாறி விட்டனர்.  புவனகிரி வெள்ளாற்றில் இதுவரை தடுப்புச்சுவர் கட்டவில்லை. விரைவில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும். அப்போது மக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். ஆட்சி மாற்றம் நிச்சயம் உருவாகும். அப்போது மக்களின் அனைத்து குறைகளும் தீர்க்கப்படும். இவ்வாறு பேசினார்.ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள் சபாநாயகம், திருமூர்த்தி, மனோகர், விவசாய அணி அமைப்பாளர் பாலு, கவுன்சிலர் கீர்த்திவாசன், காங்கிரஸ் செழியன், பழனிவேல், விடுதலை சிறுத்தைகள் அருண், சாரதி, ரஜினி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வாஞ்சிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் அன்பழகன், மதிமுக உத்திராபதி. தவாக அகில்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : DMK ,alliance parties ,MRK Panneerselvam MLA ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி