×

திருவேற்காடு அருகே எலக்ட்ரானிக் குடோனில் தீ

பூந்தமல்லி: திருவேற்காடு அருகே புளியம்பேடு பகுதியில் தனியார் எலக்ட்ரானிக் குடோன் செயல்பட்டு வருகிறது. இதில் ஏ.சி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்களுக்கான உதிரிபாகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று காலை திடீரென குடோனில் தீப்பற்றியது. இதனை கண்ட அங்கிருந்த காவலர்கள் வெளியே ஓட்டம் பிடித்தனர்.  இதுகுறித்து பூந்தமல்லி தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில்  பூந்தமல்லி, அம்பத்தூர், மதுரவாயல், கோயம்பேடு, ஜெ.ஜெ.நகர், ஆவடி உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

தொடர்ந்து 2 மணி நேரம்  போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் குடோனில் இருந்த ஏ.சி., ப்ரிட்ஜ்க்கு பயன்படுத்தப்படும்  கம்பிரசர், மின்மோட்டார்கள், ஏ.சி.காயில் என 2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. திருவேற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர்.   

Tags : godown ,Thiruverkadu ,
× RELATED ஜாபர் சாதிக்கின் சென்னை குடோனில்...