புழல்: மாதவரம் வட்டாட்சியர் அலுவலகம் புழல் பாலாஜி நகரில் செயல்பட்டு வருகிறது. இங்கு தாசில்தாராக நீலா, சிறப்பு தாசில்தாராக முருகானந்தம் உள்பட 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு வரும் பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. அதன்பேரில், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா தலைமையில் 13 அதிகாரிகள் நேற்று மாலை 5 மணிக்கு மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தினர்.
இதில் ஏராளமான ஆவணங்களும், கணக்கில் வராத பணமும் சிக்கியதாக கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவதை கண்ட வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், தங்களிடம் இருந்த பணத்தை