சிவகங்கை, நவ. 11: சிவகங்கை மாவட்ட பாஜ இளைஞரணி சார்பாக மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் ஏற்பாட்டில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் கோவை அணி முதல் பரிசு ரூ.1 லட்சம், கன்னியாகுமரி அணி 2வது பரிசு ரூ.70 ஆயிரம், மறவமங்கலம் அணி 3வது பரிசு ரூ.50 ஆயிரம், 4வது பரிசு ரூ.30 ஆயிரத்தை ஏசிசி கிரிக்கெட் கிளப் அணி பெற்றன. முதல் பரிசை தொழிலதிபர் பாலமுருகன் வழங்கினார். பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். சிவகங்கை தெற்கு ஒன்றிய தலைவர் புவியரசு, தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் முத்துராமன், மாவட்ட துணை தலைவர்கள் பாண்டி, பில்லமை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.