×

திமுகவில் இணைய இளைஞர்கள் அதிக ஆர்வம்

திருவாரூர், நவ.11: திமுகவில் அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து வருவதாக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாரூர் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று திருவாரூர் நகர அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் முன்னிலையில் நடைபெற்றது. நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள், விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் சங்கர், நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் செந்தில் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் அமுதா சந்திரசேகர் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பின்னர் பூண்டி கலைவாணன் நிருபர்களிடம் கூறுகையில், எல்லோரும் நம்முடன் என்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த உன்னத திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 25 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நிலையில் மேலும், மேலும் இளைஞர்களும், கல்லூரி மாணவ-மாணவிகளும் தங்களை திமுகவில் நினைத்துக்கொண்டு புதிய உறுப்பினர் அட்டையினை பெற்று வருகின்றனர். இதுபோன்று இளைஞர்களும், கல்லூரி மாணவ மாணவிகளும் ஆர்வமுடன் திமுகவில் இணைவதால் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு இது பெரும் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.

Tags : Internet youth ,DMK ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி