×

3 வருடமாக 4 கொலை- தொடர் திருட்டில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் கைதிக்கு தூக்கு தண்டனைக்கு பரிந்துரை

பொன்னமராவதி,நவ.11: பொன்னமராவதி பகுதியில் மூன்று வருடமாக 4 கொலைகள் செய்து தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை தூக்கில் போடுவதற்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது என புதுக்கோட்டை எஸ்.பி பாலஜிசரவணன் தெரிவித்தார். பொன்னமராவதி டிஎஸ்பி.அலுவலகத்தினை எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் கஞ்சா இல்லாத பொன்னமராவதியாக மாற்றி வரும் காவல்துறையின் மூலம் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பதாகையினை பார்வையிட்டார். பின்னர் காவல்துறையினரிடம் பேசினார். அப்போது தீபாவளி நேரமாக உள்ளது. இதில் மக்கள் அதிகம் கூடுவார்கள் காவலர்கள் பொறுமையாக அமைதியாக அவர்களிடம் அணுக வேண்டும். மேலும் நீங்கள் கொரோனோ முன்தடுப்புடன் பாதுகாப்புடன் பணியாற்றவேண்டும். மேலும் எஸ்பி கூறுகையில், பொன்னமராவதி பகுதியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மூதாட்டி உட்பட 4பேரை கொலை செய்து மேலும் தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளை கொள்ளையடித்து சிறைதண்டனையில் இருக்கும் தேவகோட்டை பகுதியைச்சேர்ந்த செல்வராஜ்(45)க்கு தூக்குத்தண்டனைக்கு பரிந்துரைசெய்யப்பட உள்ளது என்றார். இதில் டிஎஸ்பி.செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர்கருணாகரன், எஸ்ஐ மாயழகு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : murders ,prisoner ,theft ,
× RELATED ‘மலையாள நாடகத்தை ஒளிபரப்பு..’ கைதி...