×

புதுகை எஸ்பி பேட்டி இலுப்பூர் மேட்டுச்சாலையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை, நவ.11: புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகாவில் வரும் 19, 20ம் தேதிகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் இலுப்பூர் தாலுகா மேட்டுச்சாலை மதர்தெரசா பொறியியல் கல்லூரியில் வரும் 19 மற்றும் 20ம் தேதி ஆகிய 2 நாட்களில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் டிவிஎஸ் உள்பட 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், சென்னை, காஞ்சிபுரம், மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கலந்து கொள்ள உள்ளன.

மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் 8ம் வகுப்பு முதல் அனைத்து பட்டப்படிப்புகள் வரையிலும், பல்தொழில் நுட்ப கல்வி, பொறியியல் கல்வி, நர்சிங் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் முடித்த வேலைவாய்ப்பற்றோர் பங்கு பெறலாம். இம்முகாமில் வேலைநாடுனர்கள் சிரமமின்றி எளிதாக கலந்து கொள்ளும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டும் மையத்தின் 04322-222287 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு கலெக்டர் அதில் தெரிவித்துள்ளார்.
2 நாட்கள் நடக்கிறது.

Tags : SP Interview Private Sector Employment Camp ,Iluppur High Road ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு